×

உணவு கொள்முதல் முறைகேடு மேலும் ஒரு அதிகாரி கைது: சென்னையிலும் ரெய்டு

புதுடெல்லி: உணவு கொள்முதல் முறைகேட்டில்  மேலும் ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்திய உணவு கழகத்திற்கு(எப்சிஐ) உணவு தானியங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் தொடர்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி மாநிலங்களில் 50 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

இதில் எப்சிஐ துணை பொது மேலாளர் ராஜீவ் குமார் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், உபி,கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று 19 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதில் எப்சிஐ மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.   ரூ.1.03  கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Chennai , One more officer arrested in food procurement scam: Raid in Chennai too
× RELATED பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து