சென்னை: மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன் எனபேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 20 மாதங்களை கடந்துள்ளது திமுக அரசு, அதற்குள் இமாலய சாதனைகளை செய்துள்ளோம். காலம் குறைவு, ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம் என முதல்வர் தெரிவித்தார்.