×

மகாராஷ்டிரா நாசிக் அருகே சீரடிக்கு சென்ற பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 10 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா: மராட்டிய மாநிலம் நாசிக் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஷீரடிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாசிக்-சீரடி நெடுஞ்சாலையில் பாத்ரே என்ற இடத்தில் விபத்து நடந்துள்ளதாக நாசிக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.  

அதிக பயணிகளுடன் வந்த தனியார் சொகுசு பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்த வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags : Sirdi ,Nashik, Maharashtra , Sirdi-bound bus collides with truck near Nashik, Maharashtra: 10 killed
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!