×

விவேகானந்தர் எதிர்பார்த்த இளைஞர்களை உருவாக்கணும்: அண்ணாமலை பேச்சு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு விவேகானந்தா நல்லோர் வட்டம் சார்பில் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: சுவாமி விவேகானந்தர் எழுதிய புத்தகத்தில் நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்த உலகை மாற்றிக்காட்டுகிறேன் என்று பேசினார். அவர் பேசி 130 ஆண்டுகள் ஆனாலும் அவரது கனவு இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. விவேகானந்தர் எதிர்பார்த்த இளைஞர்களை உருவாக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 


Tags : Vivekanandar ,Annamalai , We must create the youth that Vivekananda expected: Annamalai speech
× RELATED கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில்...