சென்னை: போதைப் பொருட்களை தடுப்பதில் புதிய வரலாறு படைத்துள்ளது தமிழ்நாடு அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப் பொருட்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். கடந்த ஆட்சியில் நடவடிக்கை இல்லை என்பதால் செய்தி வரவில்லை நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம், அதனால் செய்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.