×

பொங்கல் கருணைக் கொடை: 2021-2022ம் ஆண்டு திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்குதல் தொடர்பான அரசாணை வெளியீடு

சென்னை: அரசு பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் அடிப்படையில் முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட அனைத்துத் திருக்கோயில் பணியாளர்களுக்கும் பொங்கல் கருணைக்கொடை ரூ.3000 2021-2022-ஆம் ஆண்டிற்கு வழங்கிட அனுமதியளிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட பொங்கல் கருணைக்கொடை ரூ.3000 தொகையினை பெற திருக்கோயில் பணியாளர்கள் 2021-2022-ஆம் ஆண்டில் 240 நாட்களும் அதற்கு மேலும் பணிபுரிந்திருக்க வேண்டும். 240 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்தோருக்கு அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு இத்தொகையினை வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

Tags : Pongal Charitable Gift: Promulgation of Ordinance Regarding Giving to Temple Employees for the Year 2021-2022
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...