×

சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: நாகை மாலி பேச்சு

சென்னை: தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவாக இருந்த சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் சிபிஎம் எம்.எல்.ஏ. நாகை மாலி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக பல எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம். தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக தென் தமிழ்நாடு மக்களின் நீண்ட கால கனவாக இருப்பது சேது சமுத்திர திட்டம். அதனை ராமர் பாலம் என்று சொல்லி ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதை மக்கள் நம்ப வேண்டும் என முயற்சிக்கிறார்கள். கட்டுக் கதைகளும், கற்பனைகளும், நம்பிக்கைகளும் வரலாறு ஆகாது எனவும் கூறினார்.


Tags : Union Government , Setu Samudra Project should be implemented immediately by the Union Government: Nagai Mali speech
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...