சென்னை: என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, சி.எப்.டி.ஐ. படிப்புகளில் சேர மாணவர்கள் குறைந்த பட்சம் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு அடிப்படையில் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எப்.டி.ஐ. போன்றவற்றில் சேர்க்கைக்கு தகுதி பெறும் மாணவர்கள் அந்தந்த கல்வி வாரியங்களால் நடத்தப்படும் 12-ம் வகுப்பு தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது தொடர்பான கருத்துகளை தேசிய தேர்வு முகமை கேட்டு இருந்தது. அதன் அடிப்படையில், என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எப்.டி.ஐ. படிப்புகளில் சேர தகுதி பெறும் மாணவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 65 % மதிப்பெண்கள் பெற்றால் போதும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. மேலும், ஜே.இ.இ. முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால், jeemain@ntac.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 011-40759000, 011-69227700 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். www.nta.nic.ac.in, https://jeemain.nta.in என்ற இணையதளங்களில் வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்பவேண்டும்.