×

ஒன்றரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 31 கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன: அமைச்சர் பொன்முடி தகவல்

திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 31 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்ட பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பழனி செந்தில்குமார் ( திமுக) கேட்ட கேள்விகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்து கூறியதாவது: பழனி தொகுதி அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது 4 கலை அறிவியல் கல்லூரிகளும், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 19 சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. இவை தவிர 13 சுயநிதி பொறியியல் கல்லூரிகள், ஒரு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, 12 சுயநிதி தொழில்நுட்ப கல்லூரிகள் இயங்கி வருகின்றன. திமுக அரசு ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் 31 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு கல்லூரி வேண்டும் என்று கோரியுள்ளனர். எந்தெந்த தொகுதிகளில் கல்லூரிகள் இல்லையோ அந்த தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு எதிர்வரும் காலத்தில் கல்லூரிகள் தொடங்கப்படும். இவ்வாறு பதிலளித்தார்.

Tags : Tamil Nadu ,Minister ,Ponmudi , 31 colleges have been started in Tamil Nadu in one and a half years: Minister Ponmudi informed
× RELATED மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி:...