×

சென்னை நந்தனம் ஓய்.எம்சிஏ மைதானத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி: அமைச்சர் ஆய்வு

சென்னை: சென்னை நந்தனம் ஓய்.எம்சிஏ மைதானத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஜனவரி 16ஆம் தேதி முதல் 18 வரை நடைபெறவுள்ளது. இதில் சுமார் 40 நாடுகளிலிருந்து கலந்து கொள்கிறார்கள். இதற்கான அரங்குகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது இதனை தமிழநாடு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு எ.வ.வேலு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலும் துறைச்சார்ந்த அதிகாரிகளிடம் நடைபெறக்கூடிய பணிகள் குறித்தும் அப்பணிகளை மேலும் சிறப்பாக நடைபெறவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தற்பொழுது அரங்குகள், அடிப்படை வசதிகளாக கழிவறைகள் உள்ளிட்டவை பெரும்பால பணிகள் நிறைவுற்றுள்ளது. அரங்குகள் அமையுள்ள இடத்தின் வரைப்படத்தினையும் அமைச்சர் அவர்களிடம் அதிகாரிகள் காண்பித்தனர்.

Tags : Chennai ,Nandanam Oi. International Book Exhibition ,India ,MCA Ground , India's First International Book Fair at Nandanam OYMCA Grounds: Ministerial Review
× RELATED இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா...