சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ரவியின் செயல்பாடு குறித்து அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளனர். அம்பேத்கர் பெயரை கூட உச்சரிக்க ஆளுநர் மறுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் பாஜகவின் ஊதுகோலாக இருக்கிறார் என்றும் பொதுமக்கள் பிரதிநிதியாக ஆளுநர் இருக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.