×

குளித்தலை அருகே புகையிலை பொருட்களை பதுக்கிய அண்ணன், தம்பி கைது

குளித்தலை  குளித்தலை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பரளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்கள் நீலமேகம், மகேந்திரன். இவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வீட்டினுள் பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.

 இது குறித்து ரகசிய தகவல் அறிந்த தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனையிட்டதில், அவர்களிடமிருந்து ஹான்ஸ் உள்ளிட்ட 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும் அவர்கள் இருவரையும் குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து குளித்தலை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் வழக்கு பதிவு செய்து சகோதரர்கள் நீலமேகம் மகேந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kulithalai , The police arrested a brother and a younger brother who were hiding banned tobacco products near Kulithalai. to them
× RELATED குளித்தலை, மணப்பாறை சாலையில்...