சென்னை: வேங்கைவயல் சம்பவம் வருத்தத்துக்குரியது; கண்டனத்துக்குரியது என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வேங்கைவயல் சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.