டெல்லி: ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய ஒரு எதிர்க்கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது என பழனிசாமி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதம் நடத்தினார். கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும் அதன் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என்றும் மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.