சென்னை: அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பது பற்றி பட்டியல் என்னிடம் உள்ளது என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது ஆதாரத்துடன் பேச வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.