ஆலந்தூர்: ஆலந்தூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஆதம்பாக்கம் மண்ணடி அம்மன் கோயில் தெருவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் மற்றும் பாலகிருஷ்ண புரத்தில் ரூ.16.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை ஆகியவற்றின் திறப்பு விழா ஆதம்பாக்கத்தில் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர் பூங்கொடி ஜெகதீஸ்வரன், பரங்கிமலை உணவு வழங்கல் துறை உதவி கமிஷனர் கருணாகரன் முன்னிலை வகித்தனர். விழாவில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையத்தையும், ரேஷன் கடையையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மண்டல உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி, திமுக வட்ட செயலாளர்கள் வேலவன், கே.ஆர.ஜெகதீஸ்வரன், ஜெ.நடராஜன், யேசுதாஸ், விஜய்பாபு, பாண்டியன், பாலகிருஷ்ணபுரம் நலச்சங்கத்தை சேர்ந்த சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.