×

இலங்கை முன்னாள் அதிபர்கள் கோத்தபய மற்றும் மகிந்த ராஜபக்சே உள்பட 4 பேர் கனடாவுக்குள் நுழைய தடை

கனடா: இலங்கை முன்னாள் அதிபர்கள் கோத்தபய மற்றும் மகிந்த ராஜபக்சே உள்பட 4 பேர் கனடாவுக்குள் நுழைய தடை விதித்துள்ளனர். விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் பொது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீது கனடா குற்றசாட்டு வைத்துள்ளது. இலங்கை ராணுவ படை பிரிவு அதிகாரி சுனில் ரத்நாயக்க, கடற்படை புலனாய்வு அதிகாரி சந்திரபிரசாத் ஹெட்டியாராச்சிக்கும், கனடாவில் உள்ள ராஜபக்சே சகோதர்கள் உள்பட தடைவிதிக்கப்பட்ட 4 பேரின் சொத்துக்களும் முடக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


Tags : Kothabaya ,Maginda Rajapakse ,Canada , Former Sri Lankan presidents Gotabaya and Mahinda Rajapakse, including 4, are barred from entering Canada
× RELATED இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம்