பிர்பூம்: மேற்குவங்கம் மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில், பாம்பு விழுந்த உணவை உட்கொண்ட 30 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, பள்ளியில் உள்ள உணவு கிடங்கை அதிகாரிகள் சோதனை செய்தபோது, சமையலுக்கு வைத்திருந்த பருப்பில் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.