சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் இருந்த பிழைகளை திருத்தி தாக்கல் செய்ய அவகாசம் அளித்துள்ளனர். சிபிஐக்கு கூடுதல் அவகாசம் அளித்து வழக்கை பிப்ரவரி 6ம் தேதி சென்னை நீதிமன்றம் ஒத்திவைத்தது .