×

ரஷ்யா - கோவா வந்த விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்: புரளி என தகவல்

கோவா: மாஸ்கோவிலிருந்து கோவாவிற்கு சென்று கொண்டிருந்த விமானம் வெடிகுண்டு மிரட்டலால் குஜராத்தில் ஜாம் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவிலிருந்து விமானிகள், பணியாளர்கள் 8 பேர் உள்பட 244 பேர் உடன் அசூர் விமானம் கோவா புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த இந்த விமான தொடர்பாக கோவா விமான கட்டுப்பாட்டாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதையடுத்து கோவாவில் தரையிறங்காமல் குஜராத் ஜாம் நகரில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 244 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், அந்த விமானத்தை தனிமைப்படுத்தி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும், விமான நிலையத்தை சுற்றி போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விமான போக்குவரத்து துறையும் கோவா போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.   



Tags : Russia ,Goa , Russia, Goa, Airplane, Bomb, Intimidation, Hoax
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...