×

விசாகப்பட்டினத்தில் பங்களா கட்டும் சிரஞ்சீவி

ஐதராபாத்: விடுமுறையில் நாளில் வசதியாக தங்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் பங்களா கட்டி வருகிறார் சிரஞ்சீவி. சிரஞ்சீவி, ரவிதேஜா, ஸ்ருதிஹாசன், கேத்ரின் தெரசா உள்பட பலர் நடித்துள்ள படம் வால்டர் வீரய்யா. இந்த படம் வரும் 13ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் பேசிய சிரஞ்சீவி, ‘இந்த ஊருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனது பல படங்களின் படப்பிடிப்புகள் இங்குதான் நடந்துள்ளது. இந்த பட ஷூட்டிங்கையும் இங்கு நடத்தினோம். பீமிலி சாலையில் நிலம் வாங்கியிருக்கிறேன்.

இங்கு பங்களா கட்டும் பணியை தொடங்கியுள்ளேன். விடுமுறையின்போது வந்து தங்குவதற்து இந்த வீட்டை பயன்படுத்திக் கொள்வேன். இந்த ஊர் மக்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. எனது பல படங்கள் விசாகப்பட்டினத்தில் வசூலில் சாதனை படைத்திருக்கிறது’ என்றார். இந்த படம் வெளியாகும் அதே நாளில் பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்ஹ ரெட்டி படமும் வெளியாகிறது. ஒரே நாளில் இரண்டு ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியாவதால் டோலிவுட்டிலும் கடும் போட்டி நிலவும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Tags : Chiranjeevi ,Visakhapatnam , Chiranjeevi is building a bungalow in Visakhapatnam
× RELATED திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!