ஜெய்பூர்: ராஜஸ்தானில் தவுசா மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்தாண்டு மார்ச் மாதம் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் 3வது குற்றவாளியான தீபக் என்ற திலீப் மீனா போக்சோவின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அவரை வரும் 13ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தந்தை ஜோகரி லால் மீனா ராஜ்கர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ ஆவார்.