×

முதல் பெண் சீக்கிய நீதிபதி அமெரிக்காவில் பொறுப்பேற்பு

ஹூஸ்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக பதவி ஏற்றார். அமெரிக்காவின் பெல்லாயர் பகுதியில் வசித்து வரும் சீக்கிய பெண் மன்பிரீத் மோனிகா சிங். இவர் கடந்த வெள்ளிக்கிழமை டெக்சாஸில் உள்ள ஹாரிஸ் கவுண்டி சிவில் கோர்ட்டின் நீதிபதியாக   பதவியேற்றார். ஹூஸ்டனில் பிறந்து வளர்ந்த மன்பிரீத் தற்போது தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் பெல்லாயரில் வசிக்கிறார். மன்பிரீத் தந்தை 1970களின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

20 ஆண்டுகளாக வக்கீலாக இருந்த மன்பிரீத் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார். புதிய நீதிபதி பதவியேற்பு விழாவில் பேசிய மன்பிரீத், ‘ ஹூஸ்டனை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார். பதவியேற்பு விழாவிற்கு  முதல் தெற்காசிய நீதிபதியான இந்திய-அமெரிக்க நீதிபதி ரவி சாண்டில் தலைமை வகித்தார். விழாவில் பேசிய சாண்டில், ‘‘சீக்கிய சமூகத்திற்கு இது ஒரு பெரிய தருணம்.

மன்பிரீத் சீக்கியர்களுக்கான தூதுவர் மட்டுமல்ல,  அனைத்து பெண்களுக்கும் தூதுவர்” என்று கூறினார். மேலும் ஹூஸ்டன் மேயர் சில்வெஸ்டர் டர்னர் கூறும்போது ‘‘இது சீக்கிய சமூகத்திற்கு ஒரு பெருமையான நாள். கோர்ட்டின் பன்முகத்தன்மையில் ஹூஸ்டன் நகரத்தின் பன்முகத்தன்மையைக் காணும் அனைத்து  மக்களுக்கும் இது ஒரு பெருமையான நாள்” என்று கூறினார்.

Tags : US , First female Sikh judge to take office in US
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...