×

ஆர்.என்.ரவி பதவி விலக வலியுறுத்தி ஜன.13-ல் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 13ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என திருமாவளவன் அறிவித்துள்ளார். தேசிய கீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறியது அவை மீறல் என திருமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்எஸ்எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய கீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசிய கீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை.

எனவே, அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். ஆளுநரின் போக்குகள் ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

Tags : Governor ,House ,RN ,Ravi ,Thirumavalavan , Governor's House siege protest on Jan 13 demanding RN Ravi's resignation: Thirumavalavan's announcement
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...