சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 13ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என திருமாவளவன் அறிவித்துள்ளார். தேசிய கீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறியது அவை மீறல் என திருமா கண்டனம் தெரிவித்துள்ளார்.