×

அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா கோரி மனு

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் ஓம் சக்தி விநாயகர் கோயில் தெருவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பலருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட 70க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகரிடம் மனு அளித்தனர். அதனை ஏற்று, துறை அமைச்சரிடம் கலந்து ஆலோசனைத்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.

Tags : Patta Cory ,Government , Petition for license to the place provided by Govt
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...