×

மே மாதம் ஸ்ரீநகரில் ஜி20 விளக்க மாநாடு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் வரும் மே மாதம் ஜி20 விளக்க மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்தோனேசியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் போது, இந்தாண்டிற்கான ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் செப்டம்பர் மாதம் ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜி-20 கூட்டமைப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், ஜி-20 அமைப்பு குறித்து விளக்க மாநாட்டை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஒன்றிய அரசு கடந்த மாதம் 5ம் தேதி கூட்டியது. இந்நிலையில், ஜி-20 தொடர்பான விளக்க மாநாட்டை வரும் மே மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு இருப்பதாக காஷ்மீர் மண்டல ஆணையர் பாண்டுரங் குந்தபாராவ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறிய போது, ``ஜி20 மாநாடு நடத்தப்பட இருப்பதால் ஸ்ரீநகர் அதற்கு தயாராகி வருகிறது. ஜி20க்கு இந்தியா தலைமைப் பொறுப்பேற்று இருப்பதால், அது தொடர்பான சில நிகழ்ச்சிகள் ஸ்ரீநகரில் வரும் மே மாதத்தில் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேதிகள் இன்னும் முடிவாகவில்லை,’’ என்று கூறினார்.


Tags : G20 Briefing Conference ,Srinagar , G20 Briefing Conference in Srinagar in May
× RELATED ஜம்முவின் லித்தியத்தை கொள்ளையடிக்கும் பாஜ: மெகபூபா முக்தி கடும் தாக்கு