நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, கடந்த ஒரு வாரமாக 555 காசாக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முட்டை விலையில் என்இசிசி மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ், மேலும் 10 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 565 காசாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். முட்டை விலை தொடர் உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முட்டை விலை பண்ணைகளில் உயர்ந்து வருவதால், சில்லரை விற்பனை கடைகளில், ஒரு முட்டை ரூ.6.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.