×

ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புகொடி: கொளத்தூர் மணி அறிவிப்பு

கோபி: ஈரோடு மாவட்டம் கோபியில்  திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி நேற்று அளித்த பேட்டி:  மகாராஷ்டிரா என்ற மாநிலத்திற்கு பெரியநாடு என்று அர்த்தம். முதலில் அந்த மாநிலத்தின் பெயரை மாற்றிவிட்டு அதன்பிறகு தமிழ்நாட்டை பற்றி ஆளுநர் ரவி பேசலாம். தமிழ் அறிஞர்களுக்கு புலப்படாத ஒரு செய்தி எங்கிருந்தோ வந்த ஆளுநருக்கு தெரிந்துள்ளது போன்று பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.

தனக்குள்ள விதிகளின்படி அவருக்குள்ள கடமைகளை செய்வதில்லை. குறைந்தபட்சம் சூதாட்ட தடை சட்டத்திற்குகூட கையெழுத்து போட முடியாத இவர் சம்பந்தமில்லாத பல விஷயங்களை பேசிக்கொண்டு இருக்கிறார். இது போன்ற போக்கை நிறுத்திக் கொள்ளாவிட்டால் இனி ஆளுநர் போகும் இடங்களிலும், வீதிகளிலும் கருப்புக்கொடி காட்டும் நிலை ஏற்படும்.  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜ துரத்தி அடிக்கப்பட வேண்டும். பெரும் தோல்வியை கொடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம் என்றார்.


Tags : Governor Ravi ,Kolathur , Black flag against Governor Ravi: Kolathur bell announcement
× RELATED பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து...