வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 5000 மீனவர்கள் மீன் பிடிக்க நேற்று ஆழ்கடலுக்கு செல்லவில்லை.
பைபர் படகு மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர். கடல் சீற்றத்தால் வெளியூர் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.