×

300 மாடுபிடி வீரர்கள் வரை பங்கேற்கலாம்.! அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

* ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து துறை அலுவலர்களுக்கு தடுப்பூசி, கொரோனா நெகடிவ் சான்று தேவை

* ஜல்லிக்கட்டு காளையுடன் உரிமையாளர், உதவியாளர் என இருவருக்கு மட்டுமே அனுமதி

* பார்வையாளர்களும் தடுப்பூசி மற்றும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்

* ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்கள் வரை பங்கேற்கலாம்

* எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதி

* ஜல்லிக்கட்டு காளைகள் ஏதேனும் ஒரு ஊரில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும், ஒரு மாடுபிடி வீரர் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்

* madurai.nic.in என்ற இணையதளத்தில் வீரர்கள், மாடு உரிமையாளர்கள் பதிவு செய்யவேண்டும்

* இணையதளத்தில் புகைப்படம், வயது சான்று, கொரோனா தடுப்பூசி சான்றிதழை பதிவேற்ற
வேண்டும்

* சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியானவர்களே டோக்கன் பதிவிறக்கம்
செய்ய இயலும்; டோக்கன் வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

Tags : Avaniyapuram ,Palamedu , Up to 300 cowherd players can participate! Avaniyapuram, Palamedu, Alanganallur Publication of Code of Conduct for Jallikattu
× RELATED பழைய அரசாணைப்படி ரேக்ளா ரேஸ்: ஐகோர்ட் அனுமதி