×

துபாயில் காதலியால் ரொனால்டோவுக்கு சிக்கல்

துபாய்: போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அங்கிருந்து வெளியேறினார். இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள அல் நசார் என்ற கால்பந்து அணி ரொனால்டோவை ரூ. 1700 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி வந்த ரொனால்டோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே ரொனால்டோவுக்கு தற்போது பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் திருமணம் ஆகாமல் யாரும் ஒரே அறையில் தங்க கூடாது. தற்போது ரொனால்டோ, தனது காதலியான ஜார்ஜினா உடன் திருமணம் ஆகாமல் உறவில் இருக்கிறார்.

இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்யவில்லை. தற்போது சவுதியில் இரண்டு ஆண்டுகள் விளையாட இருக்கும் ரொனால்டோ தனது காதலியுடன் தங்குவது சட்டவிரோதமாக கருதப்படும்.  இதனால் ரொனால்டோ என்ன செய்யப் போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. பணமா, காதலியா ,சிறையா என்ற சிக்கலுக்கு ரொனால்டோ தள்ளப்பட்டுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள அல் நசார், ரொனால்டோ வெளிநாட்டு வீரர் என்பதால் சவுதி அரேபியாவின் சட்டம் அவருக்கு பொருந்தாது. மேலும் ஏதேனும் குற்றச்செயல் நடந்தால் மட்டுமே சவுதி அரேபியாவின் சட்டம் படி தண்டனை கிடைக்கும். இதனால் ரொனால்டோவுக்கு சிக்கல் இல்லை என்று கூறப்படுகிறது.

Tags : Ronaldo ,Dubai , Ronaldo is in trouble with his girlfriend in Dubai
× RELATED லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு...