மதுரை: புதுக்கோட்டையில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை விடுவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். வானக உரிமையாளர்கள் தருமபுரி நீதிமன்றத்திற்கு நலத்திட்ட உதவியாக ரூ.7,500 வழங்கி வாகனங்களை பெற உத்தரவிடப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல் நிலையங்களில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை என நீதிபதி தெரிவித்தார்.