×

வீரகனூர் அருகே மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் பலி

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா, வீரகனூர் அடுத்த தென்கரையைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. விவசாயியான இவர் தோட்டத்தில் பட்டி அமைத்து 4 ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு சின்னத்தம்பி தூங்கி சென்றுள்ளார். இன்று அதிகாலை பட்டிக்கு சென்று பார்த்தபோது 4 ஆடுகளும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வீரகனூர் சுற்று பகுதியில் மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் இறந்து வருவது வாடிக்கையாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க வனத்துறை அலுவலர்கள் இரவு ரோந்து பணியே தீவிரப்படுத்தி மர்ம விலங்குகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Veerakanur , 4 goats killed by mysterious animal bite near Veerakanur
× RELATED கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது