×

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீதான புகாருக்கு என்ன நடவடிக்கை?.. கனிமொழி பேட்டி

சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலமாக நேற்று சென்னை விமான நிலையத்துக்கு திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி வந்தார். பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு கனிமொழி எம்பி பேட்டியில், திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலர் மீது சீண்டல்கள் நடந்ததாக கூறப்படும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பது உறுதி.

நடந்ததாக கூறப்படும் சம்பவம் நிச்சயமாக வெட்கப்படக்கூடியது, கண்டிக்கத்தக்கது. அதனால்தான் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஆளுங்கட்சி உள்பட பிற கட்சிகளை பற்றி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குறை கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரைப்பற்றி, அவரது கட்சியில் இருந்த ஒரு அம்மையார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதற்கு அண்ணாமலை என்ன பதில் கூறப்போகிறார். அவர் மீது கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதற்கு, அவர்கள் முதலில் பதில் கூறட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tamil Nadu ,BJP ,Annamalai ,Kanimozhi , Tamil Nadu BJP president Annamalai, activity, Kanimozhi interview
× RELATED சொல்லிட்டாங்க…