×

காஷ்மீருக்கு கூடுதலாக 2 ஆயிரம் சிஆர்பிஎப் வீரர்கள்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு கூடுதலாக 2 ஆயிரம் சிஆர்பிஎப் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் டோங்கிரி கிராமத்திற்குள் கடந்த 1ம் தேதி புகுந்த 2 தீவிரவாதிகள் அப்பாவி மக்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த வீட்டின் அருகே தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்தது. இதில், சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

இதனால், டோங்கிரி கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது.  இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடிய 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில்  ஜம்மு, காஷ்மீருக்கு கூடுதல் படைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரம் சிஆர்பிஎப் வீரர்கள் அங்கு கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூடுதல் படையினர் பூஞ்ச், ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Tags : Kashmir , Kashmir, 2 thousand CRPF soldiers, terrorists
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...