×

மலை உச்சியில் இருந்து காரை கவிழ்த்து மனைவி, 2 குழந்தைகளை கொல்ல முயற்சி: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது

வாஷிங்டன்:  அமெரிக்காவில் காரில் மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்யும் நோக்கில் குன்றின் உச்சிக்கு அழைத்து சென்றதாக சந்தேகத்தின் பேரில் இந்திய வம்சவாளியை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பசடேனாவை சேர்ந்தவர் தர்மேஷ் ஏ படேல். இவர் தனது மனைவி, 4வயது மகள், 9 வயது மகன் ஆகியோருடன் காரில் சான் மேடோ கவுன்டியில் உள்ள குன்றுக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து சுமார் 300அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் விபத்தில் காரில் சிக்கிய 2 குழந்தைகளையும் உயிருடன் மீட்டனர். மேலும் ஹெலிகாப்டர் மூலமாக கணவன், மனைவி இருவரையும் மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
தர்மேஷ் வேண்டுமென்றே இந்த விபத்தை ஏற்படுத்தி மனைவி, பிள்ளைகளை கொல்ல முயன்றதாக போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தர்மேஷ் மீது கொலை முயற்சி  செய்தது தொடர்பாக வழக்கு பதியவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Tags : US , Attempt to kill wife, 2 children, Indian origin in US, arrested
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!