வாஷிங்டன்: அமெரிக்காவின் முக்கிய நிர்வாக பதவிகளுக்கு 6க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரின் பெயர்களை அதிபர் ஜோபைடன் மீண்டும் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்கா நாடாளுமன்றத்தின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேலவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் தேர்தல் செயல்முறையும் கூட்டத்தில் தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அமெரிக்க நிர்வாகத்தின் முக்கிய பணிகளுக்கு இந்திய அமெரிக்கர்களின் பெயர்களை அதிபர் ஜோ பைடன் மீண்டும் பரிந்துரை செய்தார்.
மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை செயலாளராக ரிச்சர்ட் வர்மா, உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு அமெரிக்க பிரதிநிதியாக ஹெல்ெலகேரே மூர்த்தி ஆகியோரின் பெயர்கள் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அஞ்சலி சதுர்வேதி முன்னாள் படை வீரர் விவகார துறையின் ஜெனரல் கவுன்சிலராகவும், விமான படையின் உதவி செயலாளராக ரவி சதுர்வேதி, உலகளாவிய பெண்கள் பிரச்னைகளுக்கான தூதராக கீதா ராவ் குப்ரா மற்றும் பாதுகாப்பு துறை துணை செயலாளராக ராதா ஐயங்கார் பிளம்ப் ஆகியோரை நியமிக்க வேண்டும் என்றும் அதிபர் மீண்டும் பரிந்துரைத்துள்ளார்.