×

தெலங்கானாவில் கட்டணம் செலுத்த சொன்ன சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய பிஆர்எஸ் எம்எல்ஏ: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

திருமலை: தெலங்கானாவில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியை (பிஆர்எஸ்) சேர்ந்தவர் துர்கம் சின்னய்யா. இவர் மஞ்சிரியால் மாவட்டம், பெல்லம்பள்ளி எம்எல்ஏவாக உள்ளார். ஐதராபாத்தில் இருந்து பெல்லம்பள்ளி செல்லும் வழியில் மந்தமரி சுங்கச்சாவடியில் எம்எல்ஏ துர்கம் சின்னையா காரில் நேற்று சென்றுள்ளார். அப்போது, அவரது காரை ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். கட்டணம் வசூலிக்க காரை நிறுத்தியதால் துர்கம் சின்னய்யா ஆத்திரமடைந்தார். உடனே காரை விட்டு இறங்கி நேராக சுங்கச்சாவடிக்கு சென்று ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார். மேலும், ஒரு ஊழியரின் கன்னத்தில் அறைந்தார். இதனால், அவர் அலறி அடித்துக் கொண்டு ஓடினார். பின்னர், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் முழுவதும் சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதுகுறித்து மந்தமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags : PRS MLA ,Telangana , PRS MLA assaults toll booth staff in Telangana: CCTV footage released sparks uproar
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...