×

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாயும் தற்கொலை

சிவகிரி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் முருகன். டிப்பர் லாரி டிரைவர். இவரது மனைவி மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த மீனா (எ) மீனாட்சி (28). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா முமீனாள் (5), முகிஷா முமீனாள் (2) என 2 பெண் குழந்தைகள் இருந்தனர். மீனாவிற்கும், முருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் மீனா ஏற்கனவே தீக்குளிக்க முயன்றும், விஷம் அருந்தியும் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மீனா அப்பகுதியில் உள்ள கிணற்றில் இரண்டு குழந்தைகளையும் வீசி கொலை செய்தார். தொடர்ந்து தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வாசுதேவநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று சடலங்களை மீட்டனர்.  இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Mother committed suicide by throwing 2 children into a well
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...