×

திருவண்ணாமலையில் தடையை மீறி ஏறி 2668 அடி தீப மலையை வீடியோ எடுத்த ரஷ்யர்கள்: போலீஸ் தீவிர விசாரணை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2668 அடி உயர தீப மலை மீது செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டு, மலைப்பகுதியில் அதற்கான தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தீபமலை உச்சிக்கு நேற்று வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சென்றிருப்பது குறித்து தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை வனத்துறையினர் மலை உச்சிக்கு விரைந்து சென்றனர். அப்போது, அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட டிரோன் பறக்கவிட்டு, மலை உச்சியில் 3 பேர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

விசாரணையில், 3 பேரும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், டிரோன் பறக்கவிட்டவர் ரஷ்யாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சர்ஜி(27) என்பதும், மற்ற இருவரும் அவருடன் வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. திருவண்ணாமலை தீபம் குறித்து இணையத்தில் பார்த்து வியந்ததாகவும், அதனால் நேரில் வீடியோவாக எடுத்து நண்பர்களுக்கு அனுப்ப திட்டமிட்டதாகவும் அந்த வாலிபர் தெரிவித்துள்ளார். அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவருடன் வந்த பெண் உட்பட இரண்டு பேரை எச்சரித்து அனுப்பியதாகவும் வனச்சகரகர் சீனுவாசன் தெரிவித்தார்.

Tags : Russians ,Deepa Hill ,Tiruvannamalai , Russians take video of 2668-foot Deepa Hill in Tiruvannamalai: Police intensive investigation
× RELATED தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது *...