சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். திருமகன் ஈவெரா துடிப்பான இளைஞர், மக்கள் பணியில் முழுமையாக ஈடுபடுத்தி நல்ல எம்.எல்.ஏ. என பெயர் பெற்றவர். திருமகன் ஈவெராவின் அகால மரணம் அவரது தந்தை, குடும்பத்தினருக்கு பேரிழப்பு என்பதை நான் அறிவேன் என ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.