×

சென்னை மதுரவாயல் அருகே நேற்று விபத்தில் பெண் உயிரிழந்த வழக்கில் 2 ஓட்டுநர்கள் கைது

சென்னை: சென்னை மதுரவாயல் அருகே நேற்று நடந்த விபத்தில் பெண் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநர் பார்த்திபன் மற்றும் லாரி ஓட்டுநர் மோகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். போரூரை சேர்ந்த 22 வயதான ஷோபனா கூடுவாஞ்சேரியிலுள்ள தனியார் நிறுவனமான Zoho -வில் சாப்ட்வேர் எஞ்சினீயராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் 12ம் வகுப்பு படிக்கும் தனது தம்பியை திருவேற்காட்டிலுள்ள பள்ளியில் விடுவதற்காக நேற்று இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

தாம்பரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் மதுரவாயல் அருகே சென்றுகொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் பின்னால் மணல் ஏற்றிவந்த லாரி ஒன்று ஷோபனா மீது ஏறி இறங்கியது. கண் முடி திறக்கும் முன்பு நடந்த இந்த கொடிய விபத்தில் ஷோபனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நல்வாய்ப்பாக அவரது தம்பி உயிர் தப்பினார். விபத்து குறித்த தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஷோபனாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தார். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநர் பார்த்திபன் மற்றும் லாரி ஓட்டுநர் மோகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மதுரவாயல் பகுதியில் மோசமான சாலைப் பள்ளங்களால் பொதுமக்கள் அவதியடைவதாகவும், அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் அப்பகுதியிலுள்ள சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து மதுரவாயல் அருகே விபத்து நடந்த சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றாகும். சாலையை செப்பனிடுவதற்கு டெல்லி தலைமையகத்தில் இருந்து அனுமதி கிடைக்காததால் குண்டும் குழியுமாக இருந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அலட்சியம் காரணமாக சோபனா உயிரிழந்தது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை ஆணைய அலட்சியத்தால் இதுவரை 400-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.    



Tags : Madurawayal, Chennai , Chennai, Maduravayal, Accident, Woman, Fatality, Driver, Arrest
× RELATED சென்னை மதுரவாயல் அருகே தாக்குதலில்...