×

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திய 2 பேர் தற்காலிகமாக நீக்கம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கலைஞர் நகர் வடக்கு பகுதி 129அ-வது வட்டத்தை சேர்ந்த பிரவீன் மற்றும் ஏகாம்பரம் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் வடக்கு பகுதி 129அ-வது வட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரவீன் மற்றும் சி.ஏகாம்பரம் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : General Secretary ,Thuraymurugan , Temporary removal of 2 people who brought disrepute to the party: General Secretary Duraimurugan's announcement
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக...