கரூர்: கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் பேரணியில் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது என வைகோ தெரிவித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளான ஜனவரி 3ம் தேதி பேரணி நடத்தி, தேவராட்டம் ஆடி கொண்டாடப்படுவது வழக்கம். கரூரில் தேவராட்டம் ஆட முயன்ற இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது மன்னிக்க முடியாது என வைகோ தெரிவித்துள்ளார்.