×

கள்ளக்குறிச்சி பள்ளிக்கு மீண்டும் திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?.. பள்ளி நிர்வாகத்துக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை; கள்ளக்குறிச்சி பள்ளிக்கு மீண்டும் திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என அறிக்கை தாக்கல் செய்ய என கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நடந்த நிகழ்வு மாணவர்களின் நினைவில் வரும்; மனநல ஆலோசனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 9-12ம் வகுப்புக்கு பள்ளி திறக்கப்பட்டு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என பள்ளி நிர்வாகம் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போதைய சூழலை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதாக அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Kolakkurukhi , What steps have been taken to instill confidence in the minds of students returning to Kallakurichi school?
× RELATED கள்ளக்குறிச்சி தியாகதுருகம்...