சென்னை: போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். போதைப்பொருள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.