×

மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகள் கண்காட்சி

சென்னை: தி.நகரில் உள்ள மலபார் கோல்டு மற்றும்  டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகைகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும், தனிப்பட்ட திறன்களையும் அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையிலும் உள்ளன.

இந்த கண்காட்சியில் உலகளவில் உள்ள மிக சிறந்த நகைகளின் கலெக்சன்கள் அனைத்தும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். இந்த கண்காட்சி வரும் 8ம் தேதி வரை நடைபெறும். இதில், இடம்பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.

அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’ பிரமாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’  குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதைத்தவிர அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் வாங்கலாம்.

Tags : Malabar Gold ,Diamonds Showroom , Fine Jewelery Exhibition at Malabar Gold Diamonds Showroom
× RELATED புதுச்சேரியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு