×

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சிஆர்பிஎப் வீரரை தாக்கி வழிப்பறி

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரய்யா (34). மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு உணவு அருந்த அதே பகுதியில் நடந்து சென்ற போது, அவரை வழிமறித்த 4 பேர், சரமாரியாக தாக்கி அவரது செல்போன், பர்சை பறிக்க முயன்றனர்.

அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி வந்தவரை, 4 பேர் பின் தொடர்ந்து விரட்டியுள்ளனர். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால், 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். தாக்குதலில், சந்திரய்யாவுக்கு காயம் ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர், புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகிறனர்.



Tags : CRPF ,Puduvannarappet , A CRPF soldier was attacked and robbed in Puduvannarappet area
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை