×

‘புத்தாண்டில் கொலை, கொள்ளைகள் குறையணுமப்பா....’ கருப்பணசாமிக்கு கிடா வெட்டி வடமதுரை போலீசார் வேண்டுதல்

வடமதுரை: புத்தாண்டில் குற்றச் சம்பவங்கள் குறைய வேண்டி, வடமதுரை காவல்நிலையம் சார்பில் கோயிலில் கிடா வெட்டி போலீசார் வேண்டிக்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையம் சார்பாக அய்யலூர் அருகே திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள வண்டி கருப்பண்ணசாமி கோயிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபாடு நேற்று நடத்தப்பட்டது. புது வருடத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க வேண்டியும், கொலை கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் குறைய வேண்டியும் கிடா வெட்டி விருந்து நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிகழ்விற்கு வேடசந்தூர் டிஎஸ்பி துர்கா தேவி, வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் முன்னிலை வகித்தனர். இந்த கிடா விருந்தில் வடமதுரை காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார், அவர்களது குடும்பத்தினர் மற்றும் வேடசந்தூர் காவல் நிலைய போலீசார், எரியோடு காவல் நிலைய போலீசார், வேடசந்தூர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : Kita ,Karupanasamy , Vadamadurai police appeals to Karuppanaswamy to cut down on murders and robberies in New Year
× RELATED மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில்...